மதுரை மே 20,
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சர்வதேச தலைவர் நீதியரசர் பிறந்தநாள் விழா சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் சர்வதேச தலைவர் நீதியரசர் முனைவர் தி.நெ. வள்ளிநாயகம் நீதிபதி லோக் அதாலத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழகத்தில் மக்கள் மனதில் நீதிமான் என்று நீங்கா இடம் பிடித்தவர். சென்னை டிநகரில் அமைந்துள்ள நீதியரசரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடினார். உடன் ஓய்வு பெற்ற நீதியரசர்கள்
மாரிமுத்து மற்றும் எஸ் கே கிருஷ்ணன் மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மற்றும் பல அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மற்றும் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது நீதியரசருக்கு சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கொளரவித்தார். மேலும் நினைவு பரிசாக பேனா மற்றும் கடிகாரம் வழங்கி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட துணை தலைவர் ஹரிகரன், மாவட்ட துணைச்செயலாளர் வேலு, மாநகரத்தலைவர் சுப்புராஜ், மாநகர செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன், மாநகர இணைச் செயலாளர் உமாபதி, இளைஞர் அணி துணைச்செயலாளர் கிருபாகரன், மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா, மாலட்ட மகளிர் அணி துணை தலைவி ராமேஷ்வரி, உறுப்பினர் விநாயகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.