வேலூர் 29
வேலூர் மாவட்டம் ,டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம், பணி ஓய்வு 60 வயது, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு பிப்ரவரி 11 2025 அன்று நடைபெற உள்ள காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்திற்கான ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆயத்த மாநாடு வேலூர் பில்டர்பெட் ரோடு ஆசிரியர் இல்லத்தில் மாவட்டத் தலைவர் எஸ் .திருமூர்த்தி தலைமையிலும் ,மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் ,சாந்தகுமார், முரளி, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர்கள் பெருமாள், ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நா. பெரியசாமி ,மாநில பொதுச் செயலாளர் டி தனசேகரன், மாநில பொருளாளர் கோவிந்தராஜ், மாநில செயலாளர் செல்வம் ,ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினார், நிகழ்ச்சியின் நிறைவாக சேலம் மண்டல துணை தலைவர் பூபதி நன்றி உரையாற்றினார்