குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
சங்கரன் கோவில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் மூலம் சங்கரன்கோவில் புதுமனை 3ஆம் தெருவில் உள்ள குழந்தைகள் மையத்தில் வைத்து பிறப்பு முதல் 6 மாதம் வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்துகொண்டு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதில் மேற்பார்வையாளர்கள் செல்வம் ராஜேஸ்வரி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.