கோவை நவ:16
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே.பகவதி தலைமையிலும் நகர தலைவர் செந்தில் குமார் ,வட்டார தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துனைதலைவர்கள் மோகன்ராஜ்,சிற்பிஜெகதீசன்,பாலகுருசாமி, சுப்பு, ஆறுமுகம், அன்சர், ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் கொடியை மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. ஜோதிமணி ஏற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நகர வட்டார நிர்வாகிகள் கோபால்,வசந்தகுமார்,சிவசாமி,ராமசாமி,காளிமுத்து,மயில்சாமி,அய்யாசாமி,தர்மலிங்கம்,மூர்த்தி,ஆட்டோ சங்க தலைவர் கார்த்தி,சோசாயி,அருன்கண்ணைய்யா,சாந்தி,சுகுதேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெங்கட்ரமனன் வீதியில் உள்ள TELC பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.