அரியலூர், நவ;14
தமிழ்நாடு முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை தொடர்ந்து, ஜெயங்கொண்டத்தில் உள்ள ஆய்வு மாளிகை, சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ள இடம் மற்றும் ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் சாலையினை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி ஆகியவற்றினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்துத் துறை அமைச்சர்
சா.சி.சிவசங்கர் முன்னிலையில் செவ்வாய் கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தர உள்ளதை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை ஆய்வு மாளிகையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகிமைபுரம் பகுதியில் போடப்படும் சாலையினை பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு செய்து அளவீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்



