இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் ஒன்றியம் வெண்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா.
இவரது மனைவி
முருகாள். இவரது வீடு தற்போது பெய்த கனமழையால் இடிந்துவிட்டது. இதனால் பக்கத்தில் குடியிருந்து வரும் ஜோக்கப் என்பவரின் வீடும் சேதமடைந்து விட்டது.
எனவே குடி இருக்க வீடு இல்லாமல் தவித்து வரும் இவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவும், இந்த இரண்டு பேருக்கும் புதிய வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட
கலெக்டர் மற்றும் முதுகுளத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்டவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவரும் முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய செயலாளருமான எஸ் டி செந்தில்குமார்
கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.