இராமநாதபுரம் செப் 16-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலூகா ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீமகாகணபதி,ஸ்ரீசந்தனமாரியம்மன் கோவில் மகாகுப்பாபிஷேகம்விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.செப்டம்பர் 14அன்று ஸ்ரீகணபதிபூஜை,பஞ்சகவ்ய பூஜை,வாஸ்து சாந்தி,கும்ப அலங்காரம் முதல்காலபூஜை ஆகிய நிகழ்வுகள் நடைப்பெற்றன.செப்15 அன்று இரண்டாம்யாக பூஜை,கோபூஜை ,இருதெய்வங்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு விமான மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீகணபதி,ஸ்ரீசந்தன மாரியம்மன் தெய்வங்களுக்கு பன்னீர்,பால்,தேன்,பழம் போன்ற அபிஷேகங்கள் நடைப்பெற்றன. காலை 11:00மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை ஆதம்சேரி கும்பாபிஷேக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.



