சங்கரன்கோவிலில் வடக்கு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ரயில்வே பீடர்சாலையில் வைத்து நடைபெற்றது கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தந்து திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த கிளை கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இணைந்து வழங்கினர் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் இந்தியாவிலேயே 2 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் திமுக டாக்டர் ராணிஸ்ரீ குமார் வெற்றிக்கு அயராது உழைத்த திமுகவின் ஆணிவேர்கள் கிளைச் செயலாளர் கள் மற்றும் பொறுப்பாளர்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் நம்பர் ஒன் முதல்வராக மு க ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் தமிழக முதல்வரின் முத்தான திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் கட்சி பணியாற்ற மாவட்ட திமுக உறுதுணையாக இருக்கும் முதல்வரின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் யு எஸ் டி சீனிவாசன் பரமகுரு மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துசெல்வி மாவட்ட பொருளாளர் சரவணன் அன்புமணி கணேசன் ஒன்றிய செயலாளர் கள் லாலா சங்கர பாண்டியன் வெள்ளத்துரை அவைத் தலைவர்கள் மோகன் குமார் நடராஜன் முருகையா ஹைதர் அலி சந்தன பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன் பெரியதுரை நகரச் செயலாளர் பிரகாஷ் மாணவரணி உதயகுமார் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் மாவட்ட இளைஞரணி ராஜராஜன் ராயல் கார்த்தி ராஜராஜன் அன்சாரி இணையதளணி குமார் வீர மணிகண்டன் ஜெயக்குமார் உள்பட மாவட்ட ஒன்றிய நகர சார்பு அணி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர் .



