தஞ்சாவூர் ஜூலை 22
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக பா.பிரியங்கா பங்கஜம் பொறுப் பேற்றுக்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் 2015 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்வாகி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றியுள்ளார் .தொடர்ந்து ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை சார் ஆட்சியராகவும்,வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியராகவும், மதுரை மாவட்டத்தில் கூடுதல் இயக்குனர் (வளர்ச்சி) ஆகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் செயல் இயக்கு நராக பணியாற்றி,தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தின் 172வது மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.