திருப்பத்தூர்: ஜூலை :13, திருப்பத்தூரில் நெடுஞ்சாலைக்கு துறைக்கு சொந்தமான சாலைகளில் பல்வேறு தரப்பினர் கடைகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
இதனை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டு உள்ளார்
மேலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர் ஆனால் இதுவரை கடைகளை அகற்றாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைதுறை உதவி இயக்குனர் கவிதா தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திருப்பத்தூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்.
அப்போது கடையின் உரிமையாளர்கள் தங்களது கடைகளை சிலர் தாங்களே கடையை அகற்றி கொண்டனர்.
அப்போது லட்சுமி கேப் என்ற பேக்கரி கடையை அகற்றியபோது கடையின் ஷோகேஸ் கண்ணாடி ஜேசிபி இயந்திரத்தால் உடைக்கப்பட்டது.
இதன் காரணமாக ஷோகேஸ்லிருந்த குளிர்பானங்கள் அனைத்தும் சாலையில் விழுந்தன இந்தச் சம்பவம் அனைவரையும் கொதிப்படையச் செய்தது
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எனப் பலர் உடன் இருந்தனர்