திருப்பத்தூர் சாமநகர் பகுதியில் கார் செட்டில் பதுங்கி இருந்த சிறுத்தையை 12 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்
திருப்பத்தூர்:ஜூன்: 16, திருப்பத்தூர் நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 3 மணி அளவில் சிறுத்தை உலா வந்து கொண்டிருக்கிறது அதனை பிடிக்க திருப்பத்தூர் வனத்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சாமநகர் பகுதியில் உள்ள கார் செட்டில் சிறுத்தை பதுங்கிகொண்டது.
மேலும் இந்த கார் செட்டில் 5 வாலிபர்கள் இருந்தனர். இவர்களை பத்திரமாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் சிகிச்சைகாக அனுப்பிவைத்தானர்
அதனை தொடர்ந்து கார் சேட்டில் பதிங்கி இருந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் 12 மணி நேரமாக வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஓசூரில் இருந்து வந்த சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 2 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பத்திரமாக மீட்டனர்
இதனால் 12 மணிநேர தொடர் முயற்சியின் காரணமாக வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர், அனைவரும் ஈடுபட்டு சிறுதையை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிடிபட்ட சிறுத்தையை சனிக்கிழமையான காலை 9 மணியளவில் திருப்பத்தூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது