விளாத்திகுளம், மே 26 –
விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மற்றும் நடைபெற வேண்டிய திட்ட பணிகள் மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்றமுன்னாள் துணைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி செண்பகராஜ், வேல்ஈஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி என பலர் கலந்து கொண்டனர்.



