களியக்காவிளை, ஏப். 13 –
களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றப்பன விளை, கரியாறவிளை பகுதியை சார்ந்தவர் மணி (60). இவரது மனைவி செல்வின் மேரி (51). தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மணி சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். சுமார் 20 வருடத்திற்கு முன் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். சுமார் கடந்த 18 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார். இவரது மனைவி செல்வின் மேரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முறுக்கு சுற்றும் கூலி வேலைக்கு சென்று தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளை பாதுகாத்து வந்தார்.
இவர்களின் இரண்டாவது மகன் றோஜித் ஜோய் (21) திருத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் +2 வரை கல்வி கற்றுள்ளார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் அனிமேஷன் கல்வி கற்றுள்ளார். தற்போது இரண்டு கிட்னிகள் மற்றும் லிவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது வேலூரில் அமைந்துள்ள ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார், இவருக்கு கிட்னியுடன் லிவர் மாற்றி வைத்து சிகிட்சை அளிக்க 13 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இத்தனை ரூபாய் செலவு செய்ய முடியாமல் மணி மற்றும் செல்வின் மேரி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இத்தகவல் தின தமிழ் பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த நாகர்கோவில் ரோட்டிரி கிளப் சார்பில் ரொட்டேரியன் ஜெயகிருஷ்ணன், இவர் அக்னி டி.எம். டி கம்பெனியில் மேனேஜராக பனிபுரிந்து வருகிறார். இவரது நன்பர்கள் ஆல்வின் சேவியர், கிருஷ்ணகுமார், ராஜாராம், சதாசிவம் உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்து மணி குடும்பத்தினருக்கு சிகிட்சைக்கான நல உதவியை நேரடியாக வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திருத்துவபுரம் பகுதியை சார்ந்த சதீஷ் கலந்து கொண்டார்.



