மார்த்தாண்டம், மார். 16 –
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர் டி சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் சுடர்சிங், நந்தினி, மாவட்ட பொறுளார் உண்ணி , மாநில செயலாளர் மீனா தேவ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், தர்மராஜ், குழித்துறை நகர தலைவர் சுமன் உட்பட திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பின் மாவட்ட தலைவர் சுரேஷ் அவர்களை மூத்த பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அலுவலக நாற்காலியில் அமர வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் பொன் ராதாகிருஷ்ணன் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அனைவரும் சேர்ந்து உழைத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதியை கைப்பற்றலாம்.
பாஜகவிற்கு இந்த கட்டிடம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவை ஆட்சியை விட்டு இறக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகாத்மா காந்தி கட்சியை அதன் தலைவர் தங்கப்பன் பாஜக கட்சியோடு இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தாமக உட்பட பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



