நாகர்கோவில், பிப். 5 –
குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களில் விரதமிருக்கும் பக்தர்கள் 108 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 12 சிவாலயங்களில் நடந்தும் ஓடியும் வாகனங்கள் மூலமாகவும் 48 மணி நேரத்தில் தரிசனம் செய்வார்கள். தமிழகம் கேரளாவை சேர்ந்த உட்பட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க்கும் இந்த புனித யாத்திரை இந்த வருடம் வரும் 14, 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த 12 சிவாலயங்களிலும் ஒவ்வொரு வருடமும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை செய்து கொடுக்க கேட்டு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பல கோரிக்கைகள் கிடப்பில் போடப்படும் உள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் பயணம் – திக்குறிச்சி இணைப்பு பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் காட்சியளிக்கிறது. இது சம்பந்தமாக பக்தர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பக்தர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறும் ஆலய வளாகம் ஆகியவற்றில் தீபம் ஏற்றி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகினர். இதையடுத்து இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே உடனடியாக 12 சிவாலயங்களிலும் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து உள்ளது.



