By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு

Last updated: June 2, 2025 8:32 pm
June 2, 2025 14 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 2:
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரண்டு போக சாகுபடி நடைபெறுகிறது. கன்னி பூ சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த ஆண்டு போதிய மழை அளவு இருந்ததால் அணைகள் மூடப்படும் நேரத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதே போல் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தொடங்கி பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் சீரான அளவு உயர்ந்து வருகிறது.
பேச்சுப்பாறை அணை (48 அடி கொள்ளளவு) நீர்மட்டம் 43.64 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1036 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை (77 அடி கொள்ளளவு) நீர்மட்டம் 56.89 அடியாக உள்ளது. அணைக்கு ஆயிரத்து10 கன அடி நீர் உள் வரவாக உள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜூன் 1ம் தேதி பாசனத்திற்காக அணைகளை திறக்க உத்தரவிட்டார். இதயடுத்து நேற்று காலை 10:30 மணிக்கு பேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி தண்ணீர் கோதையார் இடது கரை கால்வாயில் திறக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அழகுமீனா பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் மதகை திறந்து வைத்தார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் பொன் செல்வகுமார், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை அடுத்து கலெக்டர் அழகுமீனா கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மற்றும் பட்டாணங்கால் வாய் பாசனத்திற்காக பேச்சுப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, மற்றும் சிற்றார் 2 அணைகளில் இருந்து நேற்று முதல், அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளார்.

இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு, மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதில் 14 ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயம், 15 ஏக்கர் வாழை விவசாயம், 50 ஆயிரம் ஏக்கர் தென்னை விவசாயம் உள்ளது.

விவசாயிகள் தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். பாசன கால்வாய்களில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு வேகமாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடை பரம்பு பகுதிக்கு சென்று சேர ஒரு மாதம் ஆகும். அதற்குள் கடை வரம்பு பகுதியில் உள்ள கால்வாய்களில் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும்.
பேச்சுப்பாறை அணையை தூர் வாருவது நீண்டகால செயல் திட்டம் ஆகும். இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான ஆய்வு பணி நடந்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் முறையாக அறிவித்த பின்னர் விரைவில் பேச்சுப் பாறை அணையை தூர்வாரும் பணி தொடங்கப்படும். இவ்வாறு கலெக்டர் அழகுமீனா கூறினார்.

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

டைரி வெளியீட்டு விழா

December 17, 2024 42 Views
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்
புளியம்பட்டி ஊராட்சியில் குண்டுப்பட்டி ஏரிக்கரை பலப்படுத்தும் பணி
பரமக்குடி அற்புத குழந்தை இயேசு கோவில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?