சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டை கிராமத்திலுள்ள கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் 5பேர் உயிரிழப்பு:
ரூ.4லட்சம் நிவாரணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
சிங்கம்புணரி:மே:21
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்து கொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷித் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
விபத்துத் தகவல் கிடைத்தது உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை
அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து
கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4, இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு
ரூ,1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்,கூட்டுறவுத்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை விரைவு படுத்தினார்.