வேலூர் மாவட்டம்
காங்கேயநல்லூரில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 353 வது ஆண்டு மத்ய ஆராதனை விழா
வேலூர்_22
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் செல்லியம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 353 வது ஆண்டு மத்ய ஆராதனை விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் , நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் 10வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.