கோவை ஜுலை:22
170 -வது குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண மிஷன் ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் ஸ்ரீ நாராயண குரு அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.
அதனை முன்னிட்டு ஜூலை 20,2024 சனிக்கிழமை அன்று 10 மணி அளவில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியானது ஸ்ரீ நாராயண மிஷன் வளாகம் சாய்பாபா காலனி ஸ்ரீ நாராயண மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குனியம்புத்தூர் மற்றும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரி K G சாவடி ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெற்றது.
ஸ்ரீ நாராயண மிஷன் தலைவர் T S ஹரிஷ் குமார் பொதுச் செயலர் வேலாயுதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த 800க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
அனைத்து மாணாக்கர்களும் ஆர்வமுடன் பங்கேற்று ஸ்ரீ நாராயண குரு அவர்களை பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் ஆங்கிலம் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர் N.மோகனன் போட்டியை சிறப்பாக வழி நடத்தினார்.
இதுகுறித்து ஹரீஸ் குமார் தெரிவிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் குரு ஜெயந்தி விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடுவோம் . இந்த ஆண்டு 170 குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாட உள்ளோம். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி குரு ஜெயந்தி விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.