மதுரை செப்டம்பர் 4,
மதுரை திருப்பரங்குன்றம் உண்டியலில் 146 கிராம் தங்கம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணிய சுவாமி கோயிலில் மாதந்திர உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 64 லட்சத்து 08 ஆயிரத்து 449 ரூபாய் ரொக்கமாகவும், 146 கிராம் தங்கமும், 3 கிலோ 740 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ், அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மணிச்செல்வன், சண்முகசுந்தரம், பொம்ம தேவன்.
இராமையா முன்னிலையில் மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள், மாணவிகள், வங்கி ஊழியர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.