சுசீந்திரம் ஏப் 07
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக அஞ்சு கிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் காட்டு புதூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் ஷிபின்(27) விற்பனை செய்ய வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பிரவினா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாவட்டமாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகளை குறித்த விழிப்புணர்வையும் மாவட்ட காவல்துறை ஏற்படுத்திய வருகிறது.
குமரி மாவட்ட இளைஞர்கள் போதை பாதையை தவிர்த்து வெற்றி பாதையில் பயணித்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.