தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைத் தீர்க்கும் நாளில் முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து 5 பேருக்கு தலா ஒரு 1இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்..
தஞ்சாவூர். ஜன 30.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்யில். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 620 மனுக்களை பொது மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கி னார்கள் .மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற் .கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குணசேகரன் என்பவருக்கு ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பினான பேட்டரியுடன் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கினையும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 பேருக்கு தலா1 இலட்சத்திற்கான காசோலைகளும், சத்துணவு திட்டத்தின் கீழ் பணியின் போது உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பி னர் கார்திகாவுக்கு அமைப்பாளர் பணி நியமன ஆணையையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராசன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.