வேலூர், அக். 07 –
தங்க கோவில் ஸ்ரீ நாராயினி பீடத்தில் 2 கோடி மதிப்பிட்டில் 800 மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கு உதவி தொகை தங்க கோவில் நிறுவனர் சக்தி அம்மா வழங்கினார். வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள திருமலை கோடி தங்க கோவில் ஸ்ரீ நாரயினி – பீடத்தில் ஆண்மிகம் மட்டுமல்லாது பல சமூக நல திட்டங்களும் பீடம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரப்படுகின்றது. இந்த சமுக நல திட்டங்களில் ஒன்றாக வித்யா நேத்ரம் என்ற பெயரில் ஆண்டு தோறும் உயர் கல்வி கற்க உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடந்த நிகழ்ச்சியில் 2 கோடி அளவில் 800 மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எஸ்டி, ஆணைய தலைவர் (டெல்லி கிஷோர் குமார்) பகவான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கும் பொழுது இந்த புனித பூமிக்கு வந்ததை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நம் உடல் மற்றும் ஆத்மாவை சார்ஜ் செய்ய உள்ளது, இன்று நான் சார்ஜ் செய்து கொண்டேன் என பேசினார். சக்தி அம்மா ஆண்மிக சேவை, இயற்கை சேவை, கல்வி சேவை போன்ற நாட்டுக்கு வேண்டிய சேவைகளை செய்து வருகிறார். 1000 ஆண்டுகளுக்கு பிறகு வீர துறவி விவேகானந்தவிற்கு பிறகு சக்தி அம்மா ஆண்மிக பணிகளை செய்து வருகிறார் என்று பேசினார். இவ்விழாவில் தங்க கோவில் நிறுவனர் சக்தி யம்மா மற்றும் காவல் துறை அதிகாரி பொன்னி உள்ளிட்டோர் திரளான மாணவர்களும் பெற்றோர் களும் கலந்துகொண்டனர்.



