நாகர்கோவில் ஜூலை 14
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட அனைத்து சுற்றிலும் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக திமுக அபார வெற்றி பெற்றது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளைப் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இதை கொண்டாடும் விதமாக கொட்டாரம் சந்திப்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் வைகுண்ட பெருமாள்,காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர் முருகேசன்,நிர்வாகிகள் பொன் ஜான்சன்,இ.எம்.ராஜா,அன்பழகன்,பிரேம் ஆனந்த்,வினோத்,மதி,பொன்முடி,தாமரை பிரதாப், முத்து, ஆன்டனி, காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், இசக்கி பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.