இராமேஸ்வரம், செப். 30 –
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்
தொடர்ந்து காரைக்குடி இருப்புப்பாதை காவல் வட்ட ஆய்வாளர் சுரேஷ் உத்தரவின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விக்னேஸ்வரன் தலைமையில் காரைக்குடி வட்ட குற்றத் தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார், செல்வம் மற்றும் தலைமை காவலர் மனோகரன், முதல் நிலை காவலர்கள் கொம்பையன், யாசர் அராபாத், காவலர் பரணி செல்வம் ஆகியோர் திருச்சி ராமேஸ்வரம் ரயிலில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ராமநாதபுரம் வந்த ரயில் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டது. தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மண்டபம் அருகே வரும் போது முன் பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகத்திற்குறிய பார்சல் சிக்கியது. அதனை பிரித்து பார்த்த நிலையில் அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீஸார் கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



