கிருஷ்ணகிரி, செப். 10 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.09.2025 அன்று கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகள் துவக்கி வைத்தல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதையடுத்து மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் (பர்கூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.



