திங்கள்சந்தை, ஜூன் 28 –
குமரி மாவட்டத்தில் சட்ட விரோத போதை பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை பொற முட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட கண்காணிப்பாளர்கள் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் இரணியலில் அமைந்துள்ள தக்கலை மது விலக்கு இன்ஸ்பெக்டர் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் நேற்று முட்டம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். முட்டம் சாலையில் சென்றபோது சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கை ஓட்டி வந்த தடிக்காரன்கோணம் பகுதி சேர்ந்த ஜெனிபர் (29) என்பவர் தப்பி ஓடி விட்டார். வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த அறையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டிரம், பக்கெட், பழங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த போனிஷான் (30), நிஷான் (29) மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரையும் சாராய மூலப்பொருட்களுடன் இரணியலில் அமைந்துள்ள தக்கலை மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஜெனிபரை போலீசார் தேடி வருகின்றனர்.