By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
கனஂனியாகுமரி

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு

Last updated: October 9, 2025 6:25 pm
October 9, 2025
10 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 9 –

ஹோமியோபதி மருத்துவரின் தவறான அலோபதி மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த மருத்துவ மாணவி ட்ரிஷா ஜினி. மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்ணீர் மல்க எஸ் பி யிடம் குடும்பத்தார் புகார்.

குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் இருதய ஜான். இவர் அரசு போக்குவரத்து கழக கன்னியாகுமரி டிப்போவில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இவருடைய இளைய மகள் ட்ரிஷா ஜினி ஹோமியோபதி மருத்துவராக இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15/09/2025 அன்று காய்ச்சல் இருப்பதாக கூறி வீட்டின் அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 17 ஆம் தேதி மருத்துவக் கல்லூரி வகுப்பிற்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பிய ட்ரிஷா ஜினிக்கு காய்ச்சல் இருந்ததால் மாலை அதே ஹோமியோபதி மருத்துவமனைக்கு அவரின் தகப்பனார் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் 101 டிகிரி காய்ச்சல் இருப்பதாக கூறி ஹோமியோபதி மருத்துவத்தை செய்வதற்கு பதிலாக அலோபதி மருத்துவம் செய்து ஊசி போட்டும், குளுக்கோஸ் மூலம் ஊசி மருந்தும் கொடுத்துள்ளார். ஆங்கில மருத்துவத்தில் சுமார் அரை மணி நேரம் செலுத்தப்பட வேண்டிய குளுக்கோஸ்சை ஆறு நிமிடத்தில் உடலுக்குள் நரம்பு வழியாக செலுத்தியுள்ளார். எனவே ட்ரிஷா ஜினிக்கு வலிப்பு வந்தும்,
வாந்தி எடுத்தும் வாய் மற்றும் மூக்கு வழியாக நுரை தள்ளியும் சுயநினைவு இழந்துள்ளார். உடனே மருத்துவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார்.

எந்த ஒரு அசைவும் இன்றி இருந்த மகளை பரிசோதித்த அந்த மருத்துவர் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல கூறி அங்குள்ள ஆம்புலன்ஸில் அனுப்பி உள்ளார். அரசு மருத்துவமனையில் அவளை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவள் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் உடல் கூராய்வு செய்யப்பட்டது.

அலோபதி மருத்துவ சிகிச்சை செய்வதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லாத ஹோமியோபதி மருத்துவர் தனது மகளுக்கு தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அவளை கொன்று விட்டார். எனவே மகளைக் கொன்ற மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து எனது மகளின் இறப்பிற்கு நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மூன்றுநாள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 466மனுக்கள் பொதுமக்களிடம் பெற பட்டது
புதிய தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி இந்தியா வளர்ச்சி
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
ரயில்வே மேம்பாலம் பணிகளை முடிக்க வலியுறுத்தல்
தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் விளக்க புகைப்படக் கண்காட்சி

September 24, 2024
45 Views
திமுக சார்பாக அமித் ஷாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமம்
புதிய பஸ்களை தொடங்கி வைப்பதற்காக ஈரோடு வந்தார்
இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account