மயிலாடி, ஜூன் 26 –
கன்னியாகுமரி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கிறிஸ்டியன் எண்டவர், கன்னியாகுமரி சப்ரீஜன் ஒய்.எம்.சி.ஏ, கன்னியாகுமரி பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்கம், இந்தியா அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ், கன்னியாகுமரி போக்குவரத்து காவல் மற்றும் தீயணைப்புத்துறை ஆகியன இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜேம்ஸ் டவுன் சேகரத்து போதகர் மோகன் அருள் தாஸ் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி பேராய கிறிஸ்டியன் எண்டவர் இயக்குனர் டேவிட் ஜோசப், முன்னாள் அரிமா சங்க கவர்னர் ஜஸ்டின் பால், பதிவு பெற்ற பொறியாளர் சங்க தலைவர் ஜெயபால், அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் காரியத்தரிசி ஜான் லீபன், கிதியோன், தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின், ஒய்.எம்.சி.ஏ சப்ரீஜன் சேர்மன் பெனி ஜோசப், மயிலாடி ரிங்கல்தௌபே முன்னாள் தாளாளர் ஆல்வின் நாயகம், தற்போதைய தாளாளர் எமில் ஜே. ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் விளக்கினார். மேலும் போதை விழிப்புணர்வு குறித்து அன்புவன நிறுவனர் பாலபிரஜாபதி அடிகளார், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர். டேனியலும் சிறப்புரையாற்றினர்.
பின்னர் பேரிடர் காலங்களில் மழை வெள்ளம் மற்றும் தீ விபத்தில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.