புதுக்கடை, ஜூலை 12 –
பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட அம்சி தெரு – விழுந்தயம்பலம் சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும் புயல் மற்றும் பெரு கனமழையினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த பழுதடைந்த அம்சி தெரு – விழுந்தயம்பலம் சாலையை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.
அதன் பேரில் அம்சி தெரு – விழுந்தயம்பலம் சாலையை சீரமைக்க ரூ.84,67,604 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த சாலை சீரமைக்கும் பணியை அம்சி தெருவில் வைத்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, பைங்குளம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெஸ்டின், அம்சி மண்டல தலைவர் ஜாண் றோஸ், நிர்வாகிகள் அக்பர் அலி, ஜாண்சன், ஷேக், சாந்தகுமார், அருண், சமீர், ராஜன், பபின் போஸ் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.