நித்திரவிளை, ஆக. 28 –
நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ்குமார் (45). மிக்சி, கிரைன்டர் பழுது நீக்கும் மெக்கானிக் ஆவார். நடைக்காவு பகுதியில் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 18-ம் தேதி அவரது பைக்கில் நித்திரவிளையில் இருந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு எதிரே வந்த டெம்போவில் பைக் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுனில் ராஜ்குமார் உயிரிழந்தார். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



