திருப்பூர், செப்டம்பர் 06 –
நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியர்களை களப்பயணமாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அழைத்து செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே (04.09.2025) திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியர்களை களப்பயணமாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அழைத்து செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இரண்டு கல்லூரிகளுக்கு சுமார் 250 மாணவர்கள் ஐந்து ஆசிரியர்கள் உதவியுடன் களப்பயணம் சென்றுள்ளனர் வரும் வாரங்களில் 76 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 5228 மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக் கல்வி ராஜூ, உதவித்திட்ட அலுவலர், அண்ணா துரை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



