By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்

Last updated: April 2, 2026 6:45 pm
April 2, 2026
31 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 02 –

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தின் முன்பு கழிவுநீர் தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி சுகாதாரமற்று காணப்படுகிறது; கழிவுநீர் தொட்டியின் மூடிகள் உடைந்தும் திறந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று பரவுவதுடன், விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

மாநகராட்சி என்பது சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை பேணி காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு ஆகும். சுகாதாரம், தூய்மைப் பணிகள், குடிநீர் விநியோகம், சாலைகள் பராமரிப்பு, தெருவிளக்குகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிறப்பு/இறப்புப் பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கவும், பூங்காக்கள் பராமரிப்பு, வடிகால் அமைத்தல், பொது சுகாதாரம் மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குதல், வரி வசூல் செய்தல், மற்றும் நகரத் திட்டமிடல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளவும், குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல் மற்றும் கழிவுநீர் கால்வாய்களைப் பராமரித்தல், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு நகர மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதாரத்தை மாநகராட்சி உறுதி செய்வதே மாநகராட்சியின் கடமையாகும்.

மாநகராட்சி ஆணையர் என்பவர் மாநகராட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மேற்பார்வையிடுதல், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் மாநகராட்சி முடிவுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளைக் கொண்டவராகவும், மாநகராட்சியின் தினசரி நிர்வாகத்தைப் பார்த்தல் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்களையும் ஒருங்கிணைத்தல், சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரம் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துபவராகவும் இருப்பது அவசியம்.

ஆனால் நாகர்கோவில் மாநகராட்சியில் நடப்பதை பார்க்கும்போது மக்களுக்கான ஒரு நிர்வாகமாக இது செயல்படாமல் பொதுமக்கள் பிரச்சனை மற்றும் சுகாதாரம் சம்பந்தமான விஷயங்களில் பெரும் அலட்சியம் காட்டி வருவதை காண முடிகிறது.

உதாரணமாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் நடைபெற்ற சுகாதாரப் பணிகளின் அவல நிலையை மாநகராட்சி புதிய கட்டிட வளாகத்தை இவர்கள் எவ்வாறு சுகாதாரத்துடன் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்தவுடன் கூறிவிடலாம்.

பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் தனது அலுவலக வளாகத்தில் உள்ள கழிவுநீர் ஓடைகளை பராமரிக்காமலும், கண்டுகொள்ளாமலும் விட்டதின் விளைவு தற்போது நோய் தொற்று பரவும் அவல நிலையில் காணப்படுகிறது.

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் பணியின் தரத்தை ஆய்வு செய்யாமல் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே கேட்டு தெரிந்து கொள்வதாகவும், முறையாக ஆய்வு செய்ய தவறியதாகவும், வீட்டிலிருந்து ஏசி காரில் வந்து அலுவலகத்தில் ஏசியில் அமர்ந்து நேரத்தைப் போக்கி வருவதால் பொது மக்களின் சுகாதாரத்தில் இவருக்கு அக்கறை இல்லை எனவும் இவர் மீது அந்த அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர்களே குற்றம்சாட்டி வருகின்றனர்.

பொது சுகாதாரத்தை தனது இருப்பிடத்திலிருந்து தொடங்க வேண்டிய ஆணையர் தனது இருப்பிடமான அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யாமலும், கண்டுகொள்ளாமலும் வைத்திருப்பதை பார்க்கும்போது இவர் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் துளியும் அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாக தெரிவதாக பல்வேறு தேவைகளுக்காக இந்த அலுவலகம் வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
தனது வங்கி கணக்கை விடுவிக்க கோரி செல்போன் கோபுரம்
பொள்ளாச்சி பட்டாம்பூச்சி இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு புகழஞ்சலி
கேரளா மடாதிபதி சாமிதோப்பு அன்புவனம் வருகை
மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம்பெண் மீது வழக்கு

September 22, 2025
48 Views
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
கிருஷ்ணகிரியில் “கல்லூரிக் கனவு 2025”
திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account