நாகர்கோவில், ஜூன் 23 –
நாகர்கோவிலில் டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவில் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை நிலையமாகவும் பிராண்டாகவும் முன்னணி வகிக்கும் தனிஷ்க்-ல் முன் எப்போதும் இல்லாத வகையில் தங்க பரிமாற்ற சலுகை அறிவிப்பை வெளியிட்டு அசத்தி வருகிறது. அதாவது இச்சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும்போது இரண்டு கேரட் வரை கூடுதல் மதிப்பு பெற முடியும் என நிறுவன மேலாளர் அருண் ஜோஸ்வா தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது: தனிஷ்க் நிறுவனம் இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 500க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இது தற்போது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நல்லெண்ணத்தில் சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இச்சலுகை ஜூன் 30 தேதி வரை மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் இச்சலுகை தனிஷ்க் அல்லாத நகைக்கடைக்காரர்களிடம் இருந்து வாங்கப்பட்ட பழைய தங்கத்திற்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்கள் நவ நாகரிகமான மிக நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்கு தரம் மேம்படுத்தும்போது அவர்களது நகைகளுக்குக் கூடுதல் மதிப்பு பெறுவதே நோக்கமாகக் கொண்டு திட்டம் செயல்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடைகளில் இருந்தும் வாங்கிய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க் நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. தங்க பரிமாற்றம் ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது சவுரியத்திற்கு ஏற்ப வாங்கும் வசதியையும் வாய்ப்பையும் வழங்குகிறது.
மிகவும் நேர்த்தியான மற்றும் நுட்பமான கைவினைத் திறனை வெளிப்படுத்தும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்குத் தரம் மேம்பாட்டு கொள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. தங்க பரிமாற்று சலுகை அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் திருமணம், பிறந்தநாள், ஆண்டு விழாக்கள், பண்டிகை நிகழ்வுகள் போன்றவற்றிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் மிக்க தர உறுதியுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக நம் இந்தியர்களிடையே நற்பெயர் மற்றும் நன் மதிப்புடன் செயல்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்றவாறும் அனைவரும் விரும்பும் வண்ணத்திலும் இந்நிறுவனத்தின் நகைகள் வடிவமைக்கப்பட்டு திறம்பட நகைகளின் தூய்மை தன்மை குறித்து பரிசோதித்து வழங்கி வருவதாகவும்
குமரி மாவட்டத்தில் அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் டெரிக் குரூப் நிறுவன தலைவர் தொழிலதிபர் ஸ்டாலின், மேலாளர் சர்ஜித் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.