சங்கரன்கோவில், ஜூன் 10 –
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தென்காசி வடக்கு திமுக சார்பில்
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில துணைச் செயலாளர் திமு ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இந்தியா கூட்டணி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல்கள் சரிபார்ப்பு மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திடவும் மேலும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திடவும் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் அனைவரும் ஒன்றிணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் தொகுதியில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடைய கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடன் இணைந்து உழைக்க வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி.சீனிவாசன், மருத்துவரணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம், தொகுதி பொறுப்பாளர்கள் ராம ஜெயம், முன்னாள் எம்பி தனுஷ் எம்.குமார், மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, மாவட்டப் பொருளாளர் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் உச்சி மாகாளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இசக்கி துரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் செய்யது பட்டாணி, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் லிங்க வளவன் ஜான் தாமஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான், அகில இந்திய பார்வர்டு பிளாக் சுப்பிரமணியன், தமிழ் புலிகள் கட்சி சந்திரசேகர், ஆதி தமிழர் பேரவை மதன்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி முகைதீன், திராவிட தமிழர் கட்சி மகாலிங்கம், தமிழர் ஆட்சிக் கழகம் கருப்பசாமி, பாண்டியன் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகரச் செயலாளர் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி நாகூர் உள்பட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.