By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

Last updated: July 2, 2025 3:46 pm
July 2, 2025
24 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 2 –

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 33 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து உலக சிக்கன நாள் விழா 2024 முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, சொற்டர் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 12 மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

மேலும், 2023 – 2024ம் நிதியாண்டில் சிறுசேமிப்புத் திட்டத்தில் சாதனை புரிந்த நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு முதலிடம் பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் ரூ.3000, இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.2000 மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.1000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களும் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்து முதல் மூன்று இடங்களை பெற்ற நிலை முகவர்களுக்கு கேடயம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களும், மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மகளிர் முகவர்களுக்கு கேடயம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களும், நகர்புற அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த இரண்டு மகளிர் முகவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரமும், ஊராட்சி ஒன்றிய அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த 12 மகளிர் முகவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டுமான தொழிலாளிகள் நலவாரியம் மூலம் நலத்திட்ட உதவி
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ
தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் சுதந்திர தின விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

August 20, 2024
47 Views
புரட்சி பாரதம் கட்சியின் 47-ஆம் ஆண்டு துவக்க விழா
குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி
சென்னை ஸ்டோரி டெல்லிங் விழா
புளியங்குடியில் பட்டா வழங்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account