திருப்புவனம், ஜூன் 24 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவந்தி துணை மின் நிலையம் ஏனாதி காலனியில் ஒரு மின் கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளதை எமது செய்தியாளர் பார்வையில் கண்டறிந்து சுட்டிக்காட்டிய செய்தி கடந்த ஜூன் 20.06.2025 அன்று வெளியானதை தொடர்ந்து மின் உதவிப் பொறியாளர் மேற்பார்வையில் உடனடியாக சரி செய்த
மின்சார பணியாளர்கள். இதனை அறிந்த பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் மின் துறையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.