May 23, 2025: திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 5 -ஆம் தேதி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் ஏறத்தாழ 30 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்றனர்.
இக்கோடைகால கேரம் பயிற்சி முகாமின் இறுதியில், கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் மூன்று பிரிவுகளில் (கேடட், சப்ஜூனியர், ஜூனியர்) போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா மற்றும் கோடைகால கேரம் பயிற்சி முகாம் நிறைவு விழா 21-ஆம் தேதி திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஶ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் கோமகள் , திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் ஆல்வின் செல்வகுமார், பொருளாளர் மருதமுத்து, இணைச் செயலாளர் ஜெஸ்பர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் சாமுவேல் டேவிட், சசிபாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள்.