தஞ்சாவூர், ஜூலை 23 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 525 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் மணிமாறன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.