தஞ்சாவூர், அக்டோபர் 7 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் என் பாலிசி என் கையில் திட்டத்தின் கீழ் குறுவை பருவத்தில் வங்கிகள் மூலம் விண்ணப்பித்த 5 விவசாயிகளுக்கு பாலிசி ஆணையையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் ஆனந்த ராமன் என்பவருக் கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினையும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, களால் உதவி ஆணையர் ரேணுகா தேவி, பிற்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



