திண்டுக்கல் மே:12
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகில் உள்ள கொம்பேறிபட்டி நால் ரோட்டில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் கொம்பேறிபட்டி ஊராட்சி இணைந்து நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் சமூக சேவகர் டாக்டர். மருதைகலாம் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி செயலர் பரமேஸ்வரன், ஹெல்த் இன்ஸ்பெக்டர் சூப்பர்வைசர் ஆரோக்கிய சேசுராஜ் கலந்து கொண்டு நீர் பந்தலை தொடங்கி வைத்தனர். அப்துல் கலாம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்து கார்த்திக் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அக்கினி வெயிலை தணிக்க நீர்மோரை அருந்தி சென்றனர்.