குன்றத்தூர், செப். 5 –
குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேத்தா நகர் 18, 19 வார்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, காப்பீடு அட்டை, மின் இணைப்பு குறைபாடாகிய பல்வேறு மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு சிறுகுறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.
மேத்தா நகர் 12-வது தெருவில் வசிக்கும் செல்வராணி முகாமில் மனுவை வாங்காததால் அமைச்சரிடம் நேரில் மனுவை கொடுத்து கூறும்போது 4-ம் மாதம் புயல் மழையின் போது தெருவில் உள்ள அனைத்து கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. வீடுகட்டுவதால் தான் விழுந்தது என 40 ஆயிரம் பணம் வாங்கிய உதவி பொறியாளர் மகேஸ்வரி மேலும் 65 ஆயிரம் மின் இணைப்பு அட்டையில் பைன் போட்டு சென்றது மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக அமைச்சர் அன்பரசனிடம் மனு கொடுத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதில் நகராட்சி தலைவர் கோ. சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஈபி உதவி செயற்பொறியாளர் இருளரசன், வார்டு உறுப்பினர் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



