சுசீந்திரம், செப். 19 –
சுசீந்திரம் அருகே உள்ள கீழரதவீதி பகுதியைச் சார்ந்தவர் முன்னப்பன் (29). இவர் வீட்டில் காளை மாடு வளர்த்து வருகிறார். பிரதோஷ நாட்களில் கோவிலுக்கு மாட்டை கொண்டு சென்று கோவிலை சுற்றி வருவது வழக்கம். இன்று பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலுக்கு தனது காளை மாடை கொண்டு செல்வதற்காக இன்று காலை வீட்டின் பின்பகுதியில் மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக காளை மாடு உதைத்து தள்ளியது.
இதில் பலத்த காயமடைந்த முன்னப்பனை அக்கம் பக்கத்தினர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளர். இதுகுறித்து அவரது தந்தை தாணுமாலய பெருமாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



