திருப்பூர், ஜூலை 15 –
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சங்கராம நல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் காமராஜரை பற்றிய பேச்சுப்போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்வில் சங்கராம நல்லூர் பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி. தாமோதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணீஸ்வரி மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.