May 23, 2025:- அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி,
இஸ்ரேலிய இராணுவம் இடைவிடாமல் காசா மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பிரதேசம் முழுவதும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களில் காசாவிற்குள் நுழைந்த மட்டுப்படுத்தப்பட்ட உதவி போதுமானதாக இல்லை என்று ஐ.நா. அமைப்புகளும் உரிமைக் குழுக்களும் எச்சரித்தன, மேலும் அந்த பகுதி மீதான முற்றுகையை நீக்குமாறு அழைப்பு விடுத்தன.



