ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 11 –
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் கிருஷ்ணன்கோவில் காவல் துறை சார்பில் பல்கலை போதை ஒழிப்பு குழு இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் வரவேற்புரையில் “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்” என்ற திருக்குறளைக் கூறி போதை ஒழிக்கவேண்டிய அவசியத்தை கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் காவல் துணை ஆய்வாளர் ஏ. ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “சட்டத்தால் எந்த ஒரு மனிதனையும் திருத்த முடியாது; சுயக் கட்டுப்பாடு இருந்தால் எந்தவித சக்தியும் ஒரு மனிதனை மாற்ற முடியாது” என்றார். வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் டி. சந்திரன், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், மாணவர் நல இயக்குநர் பி. பாலக்கண்ணன் கலந்து கொண்டு பேசினர்.
மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். கிருஷ்ணன்கோவில் சார்பு துணை ஆய்வாளர் எம். மதிவாணன் நன்றி கூறினார்.
விழா இனிதே நிறைவுபெற்றது.



