By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரி

இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை

Last updated: July 24, 2025 7:49 pm
July 24, 2025 15 Views
Share
SHARE

ராஜாக்கமங்கலம், ஜூலை 24 –

மண்டைக்காடு அருகே லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (63). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 25, 22 வயதுகளில் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது தாயாருடன் வசித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சுவாமிதாஸ் கவிதா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சகோதரி கிருஷ்ணபாய் வீட்டில் சுவாமிதாஸ் தங்கி இருந்து சகோதரியின் கணவர் வைத்துள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கு இடையே நேற்று முன்தினம் இரவு கடையில் சுவாமிதாஸ் மட்டும் இருந்துள்ளார். அந்த பகுதியில் வேறு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்துள்ளனர். கடையில் இருந்த சுவாமிதாசை அறிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். அப்போது வெட்டிய இரண்டு பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த தகவல் அறிந்ததும் அவரது சகோதரி விரைந்து வந்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கன்னியாகுமரி, குளச்சல் டிஎஸ்பிக்கள் விரைந்து சென்று போலீஸ் மோப்ப நாய் சகிதம் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் சுவாமிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது சம்மந்தமாக சுவாமி தாஸ் சகோதரி அளித்த புகாரில், கடந்த 10 வருடங்களாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சகோதரர் சுவாமி தாஸ் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். கடந்த 2020 முதல் தனது வீட்டில் தங்கி இருந்து வருவதாகவும், சுவாமிதாஸுக்கு லட்சுமிபுரத்தில் வீட்டு மனையுடன் கூடிய 45 சென்ட் இருந்து வருவதாகவும் உள்ளது. அந்த நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி தருமாறு மனைவி கேட்டுள்ளார். ஆனால் சுவாமிதாஸ் கொடுக்க மறுத்துள்ளதால் தான் சகோதரனை கொலை செய்ய இந்த கொலை நடந்துள்ளதாக அவர் புகாரில் கூறியுள்ளார். இது ராஜக்கமங்கலம் போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து சுவாமி தாஸ் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை

March 30, 2025 21 Views
பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்
அதிமுக சார்பில் கோவிலில் விஷேச வழிபாடு
திண்டுக்கல்லில் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி
52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?