மதுரை ஜூலை 24,
ஒரு லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும் அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
மதுரை, பொது மருத்துவத்துறை, மருத்துவக் கல்லூரி & மதுரை அரசு இராசாசி மருத்துவமனை உதவியில்
மத்திய பிரதேச மாநிலத்தை சார்ந்த 26 வயதுடைய பெண் ராஜ்கனி தன் கணவரின் பணி நிமித்தம் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பகுதிக்கு கணவருடன் ஒரு வருடத்திற்கு முன் இடம் பெயர்ந்தார். இவ்வேளையில் 3-வது முறையாக கர்ப்பமடைந்த நிலையில் 20.06.2024 அன்று காலை 4.00 மணியளவில் வீட்டிலேயே ஆண் குழந்தை (எடை: 2.3 கிலோ) பிறந்தது. அடுத்த நாள் 30.06.2024 ல் 5மணி முற்பகல் காலை வலிப்பு வந்ததன் காரணமாக நெடுகண்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக வலிப்பு நோய் (Postpartum Eclampsia) எனப்படும் நோய் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 07/07/2024 இரவு 8 மணியளவில் இரண்டு கால்கள் மற்றும் கைகளும் செயல்படாமலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும் மதுரை மருத்துவமனைக்கு அரசு இராசாசி மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் பல்வேறு மருத்துவ பரிசோதனைக்களுக்கு பிறகு அவருக்கு குயில்லன் பார்ரே நோய் தாக்கம் (Guillian Barre syndrome) GBS- AMSAN எனப்படும் நோய் கண்டறியப்பட்டு IVIG எனப்படும் உயர்சிகிச்சை மருந்து 5 நாட்களுக்கு தீவர சிகிச்சை பிரிவில் பொது
மருத்துவத்துறையின்
கண்காணிப்பின் கீழ் தொடர் சிகிச்சை
அளிக்கப்படது. சிகிச்சையின் பலனாக தற்போது நோயாளியின்
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் முற்றிலும்
நீங்கி கை கால்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. சேயும் நலமாக உள்ளனர். இந்த நோய் 1 லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும். அரிய வகை நோய். இதற்குரிய உயர் சிகிச்சை உரிய நேரத்தில்
செய்தால் மட்டுமே நோயாளி நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து
முழுவதுமாக விடுபட முடியும் என அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.