மயிலாடுதுறை, ஜுன் 23 –
மயிலாடுதுறை ஆதியோகி யோகா மையம் மற்றும் எக்விடாஸ் வங்கி சார்பில் சர்வதேச யோகா தின விழா டி.பி.டி.ஆர் தேசிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு ஆதியோகி யோகா மைய முதன்மை பயிற்சியாளர் ராமசாமி தலைமை வகித்தார். வர்மக்கலை நிபுணர் மதிவாணன், ஆதியோகி யோகா மைய ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் பாரதிதாசன், செந்தில்ராஜன், காமராஜ், கவிஞர் அய்யாசாமி, மருத்துவர் முத்து, எக்விடாஸ் வங்கி கிளை மேலாளர் மணிவண்ணன், துணை மேலாளர்கள் முரளி, கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி ஆரோக்கியத்தோடு வாழ்வதற்கு நல்வழி காட்டும் யோகாவின் மகத்துவத்தையும் மேன்மையையும் எடுத்துக்கூறி சிறப்பு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து ஆதியோகி யோகா மையம் மற்றும் எக்விடாஸ் வங்கி சார்பில் சிறப்பாக யோகா பயிற்சி செய்து வருபவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதியோகி யோகா மைய ஒருங்கிணைப்புக் குழுவினர் செய்திருந்தனர்.