By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்.
தருமபுரிமாவட்டம்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்.

Last updated: May 12, 2024 11:49 am
May 12, 2024 93 Views
Share
SHARE

தருமபுரி, மே.11-

தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் இன்று நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி பார்வையிட்டார்.
பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி தகவல்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் இன்று (11.05.2024) நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ ஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி தெரிவித்ததாவது:

தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை. காவல் துறை. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்குத் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 147 தனியார் பள்ளிகளில் இயங்கிவரும் 1146 பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் இன்று முதல் 11.05.2024 வரை நடைபெறவுள்ளது. இன்றைய தினம் பள்ளி வாகன ஆய்வின்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 420 வாகனங்களில் 11 வாகனங்கள் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான், வேகக் கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி கேமிரா, அவசரகால வழி, பேருந்து படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி, கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும்.
மேற்கண்ட அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடுகள் இருப்பின் சரி செய்துவர கால அவகாசம் அளிக்கப்படும். மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று இரத்து செய்யப்படும். அதேபோன்று, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு முழு உடற்பரிசோதனை முகாம் நடத்தப்படுவதுடன் வாகன ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்றவாறு வாகனத்தை இயக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பாக சாலை விபத்து தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம். இருந்தாலும், பல்வேறு சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சாலை விபத்துகளை தடுக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடந்த ஆண்டு வாகனத்தை இயக்கியது போல இந்த வருடமும் நல்லபடியாகவும், மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் பேருந்துகளை இயக்கி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக சேர்க்க வேண்டும். தங்களுடைய ஆரோக்கியத்தையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, துனைப்போக்குவரத்து ஆணையர் (சேலம்) திரு.கே.எம் பிரபாகரன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவராமன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.அ.க.தரணீதர், திரு.G.வெங்கிடுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தருமபுரி மாவட்டம்.

You Might Also Like

ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்

எச்.சி.எல் ஃபவுண்டேஷனின் மாற்றத்திற்கான தேசிய விளையாட்டு இறுதிப் போட்டி 2025

இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா

அதிமுக – பாக செயலாளர் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பொள்ளாச்சியில் நாதக சார்பில் ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த கோரி சார் ஆட்சியரிடம் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் துளசி செடி

March 30, 2025 19 Views
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
மரத்தில் கார் மோதிதாய் மகன் பரிதாப பலிமூன்று பேர் படுகாயம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டம் 2025
தேவசமுத்திரம் ஏரியிலிருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளை நீர்வளத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?